புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் கீழ்க்கண்ட திருப்புகழை பாராயணம் செய்ய வேண்டும் .

vahitips
0
சொந்த வீடு அருளும் திருப்புகழ்

புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர்  கீழ்க்கண்ட திருப்புகழை பாராயணம் செய்ய வேண்டும் .

பாடல் 

"அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற அருளாலே

அந்தரியொ (டு) உடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக

மண்டலமும் முனிவோரும் எண்திசையில் உளபேரும்
மஞ்சினும் அயனாரும் எதிர்காண

மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
மைந்துமயிலுடனாடி வரவேணும்

புண்டரிக விழியாள! அண்டர்மகள் மணவாள!
புந்திநிறை அறிவாள! உயர்தோளா

பொங்குடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா

தண்தரண மணிமார்ப! செம்பொன் எழில் செறிரூப!
தண்தமிழின் மிகுநேய முருகேசா

சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே''

இத்திருப்புகழினை மனமுருகிப் பாராயணம் செய்து புதிய சொந்தவீடு வேண்டுவோர் பலருக்குத் தவறாமல் முருகன் வரம் அளித்துள்ளான்.

`அண்டர்பதி' என்று துவங்கும் பாடல் தன்னை பாடுவதால் சொந்தவீடு கிட்டுவதோடு இன்பம் மகிழ்ச்சியும் தாண்டவமாடும்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)